NeoCounter

NeoCounter

Thursday, August 1, 2013

தமிழ் பத்திரிகைத்துறையும் அதன் தேவையும்

“நான் என்னுடைய உயிரை குடிக்கும் ஆயிரம் அம்புகளுக்கு பயப்படவில்லை. ஓர் எழுத்தாளனின் பேனா முனைக்கு அஞ்சுகின்றேன் “ என்று கூறியவர் மாவீரன் நெப்போலியன்.

‘ஆயிரம் ஏவுகணைகளால் சாதிக்க முடியாத ஒரு காரியத்தை சாதிக்கும் திறைமை கொண்ட ஒரு துறையே ஊடவியல் துறையாகும். இத்தகைய வல்லமை கொண்ட இத் துறையில் இன்று அடியெடுத்து வைப்பவர்களின் வாழ்க்கையோ கத்தி முனையில் வாழ்வா? சாவா? என இரண்டுக்கும் நடுவே போராடும் போராட்டமாகி விட்டது.

ஜனநாயகத்தின் 4வது தூண் என வர்ணிக்கப்படும் ஊடத்துறையானது மக்களை பற்றியே மக்களுக்கு அறிவிப்பது மட்டுமல்லாது பிழைகளை சுட்டிக்காட்டி உலகத்தை உலகுக்கு உள்ளவாறே எடுத்துக்காட்டும் ஒரு துறையாக உள்ளது. இத்துறையில் அச்சுத்துறையானது ஏனைய துறைகளுடன் மாறுபட்டு விளங்கும் அதே வேளை விசேடமான ஒரு துறையாகவும் உள்ளது. இது மக்களின் குரலாகவோ அல்லது அவர்களது உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்ற அதே வேளை பாமர மக்கள் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய மொழிநடையில் குறைந்த செலவுடையதாகவும் எல்லா இடங்களிலும் கொள்ளனவு செல்லக்கூடியதாகவும் அமைந்துள்ளதால் இது எல்லோரிடத்திலும்  ஒரு தனித்துவத்தை தனதாக்கிக் கொள்கின்றது. இதன் காரணமாகவே இத் துறை எப்போதும் பல எதிர்ப்புகளையும் ,எதிர் வினைகளையும் தனதாக்கிக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் எந்த ஒரு ஊடகத்துறையாயினும் அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாகவே செயற்படல் வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இல்லையெனில் அடக்கு முறையென்னும் கரத்தினுள் அகப்பட்டு சிதைபடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான்.  இந்நிலையில் தமிழ் ஊடகவியல் துறையானது மூன்று தசாப்த கால யுத்தத்தில் பல  பின்னடைவு களையே சந்தித்திருந்தது. அதாவது பல உயிரிழப்புகள் ,பொருட்சேதம் ,அச்சுறுத்தல்கள் என பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ளமையால் இன்று நாட்டில் பல ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இல்லாமலேயே போய் விட்டனர். இந் நிலையே யுத்தம் முடிவடைந்தும்  இன்று வரை இலங்கையில் தொடர்கதையாக உள்ளது.

ஒரு நாட்டின் ஜனநாயகமானது சமமாகவும் சமத்துவத்துடனும் பேணப்படுகின்றது என்பதை ஆதாரப்படுத்தும் ஆதாரங்களில் ஒன்றாக ஊடகவியல் துறையானது காணப்படுகின்றது. நம் நாட்டில் ஊடக சுதந்திரம் பற்றிய சட்டதிட்டங்கள் கொள்கைகள் காணப்படுகின்ற  போதும்  தமிழ் ஊடகங்களுக்கு சுதந்திரம் என்பது போருக்கு முன்பும் சரி இன்றும் சரி எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழ் ஊடகவியல் துறையானது யுத்ததின் போது உயிரால் உடலால் உள்ளத்தால் சிதறடிக்கப்பட்ட மக்களை உறவுகளோடு சேர்த்து வைப்பதிலும் அநாதைகளாய் தவிர்த்த பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதும் உதவிபுரிய தாமாகவே முன்வந்தோரை இனங்காட்டி உதவி புரியச் செய்யும் கருணைப்பாலமாய் துன்பத்தை பகிர்ந்து கொள்ளும் நண்பனாய் நல்லதைக் சொல்லிக் கொடுக்கும் ஆசானாய் செயற்பட்டு வந்தன என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

ஆனால் தற்காலத்தில் மக்களின் தேவையும் எதிர்பார்ப்பும் மாறுபட்டதாகவே உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஏற்படும் மாற்றங்களினை இனங்கண்டு செயலாற்ற வேண்டிய ஒரு கட்டாய நிலை உள்ளது. போரின் போது அல்லல் பட்ட சமூகமானது தனது அன்றாட தேவைகளினை பூர்த்தி செய்வதற்காக அமைதியையும் நிலையான இருப்பிடத்தையும் தமது உயிரினையும் பாதுகாத்துக் கொள்வதினையே நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.  இதனால் பொருளாதாரம் , பொழுது போக்கு என்பன மக்களுக்கு அவசியமான ஓன்றாகி விட்டது .இம் மாற்றத்தினால் ஒரு குறுகிய காலத்தில் இன்று தமிழர் பண்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. கால நீரோட்டத்தில் மாற்றங்கள் வருவது  இயல்பே. ஆனால் அதன் தனித்துவம் அழிவடையாமல் பாதுகாக்க ஊடகங்கள் முன்னின்று செயலாற்ற முடியும்.   இதற்க்கு இன்று ஊடகங்கள் அனைத்தும் தமக்குள் ஒரு இணக்கப்பாட்டை உருவாக்கி தமது கொள்கை ரீதியில் ஒருமித்த செயற்பாட்டை கொண்டிருப்பது அவசியமாகின்றது.

இதனால் மக்கள் மத்தியில் ஒரு நடு நிலையான கருத்தை உருவாக்குவதிலும் இதனை வளர்த்தெடுப்பதிலும் பொது நலனில் ஆர்வமுள்ள இளம் சமுதாயத்தை உருவாக்கவும் முடியும். எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையுமே மட்டும் மக்களிடையே ஏற்படுத்தாது ஊடகங்கள் எடுத்துச் செல்லும் விடயம் மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இருத்தல் வேண்டும்.

எந்த ஒரு நெருக்கடி வந்தாலும் இதனை தயங்காமல் தணிக்கை செய்யாமல் உள்ளதை உள்ள படியே வெளியிடும் ஊடகங்களே மக்க ளிடத்தில் நிலை பெற்று இருப்பனவாக உள்ளன. இதனால் சில தமிழ் ஊடகங்கள் இன்றும் இம்முறையை பின்பற்ற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளன . இன்று செய்தியாக எழுதப்படுபவை நாளைய சரித்திரங்களாக பதியப்படுகின்றன. இதனால் தமிழ் மக்களுடைய நிலையானதும் உண்மையானதுமான சரித்திரத்தை தடம்பதிப்பிக்க செய்வது இன்று தமிழ் ஊடகங்களின் கைகளிலே..

Friday, July 19, 2013

பருத்தித்துறை  தெருமூடிமடம்


யாழ்ப்பாண நகரத்திலிருந்து வட கிழக்காக ஏறத்தாழ 33 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் வடமராட்சிப் பகுதியானது பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய மூன்று மூன்ற பிரதேசச் செயலகங்களை உள்ளடக்கியுள்ளது. வடமராட்சி வடக்குப் பிரதேசமானது 35 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 50.2 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டதாகும். பங்கு ஏறக்குறைய 49066 மக்கள் வாழ்கின்றார்கள்.

பருத்தித்துறை பட்டினத்தின் பிரதான வீதியிலிருந்து கிழக்குப்புறமாக தும்பளை வீதியில் அமைந்துள்ள பழைமையான ஒரு பாரம்பரியமே தெரு மூடி மடமாகும். இது இடது வலது ஆகிய இரு பக்கமும் தரையிலிருந்து 2 அடி உயர்த்தப்பட்டு, நீளம் வரை திண்ணையாக்கப்பட்டு, 20 அடி உயர் வாகக் கூரையமைக்கப்பட்டு இரு மருங்கையும் மூடி வெயில்படாத வகையில் அவ்வீதியால் பயணிப்போர் இளைத்துக்களைத்து வருகையில் அவ்விடத்தில் ஆரசுமர இருந்து இளைப்பாற்றிக் கொள்வதற்காக இன்றைக்கு 150 வருடங்களுக்கு மேலாகக் கட்டப்பட்டதே இந்தத் தெருமூடி மடம்.

பருத்தித்தறை நகரில் தெருமூடி மடங்கள் மந்திகை, மாலுசந்தி ஆகிய இடங்களில் இருந்த போதும் தற்போது பருத்தித்துறை தெருமூடி மடம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஏனைய இரண்டு இடங்களில் இருந்த தெருமூடி மடங்கள் இடிக்கப்பட்டு உரிய பராமரிப்பு மின்றி கைவிடப்பட்ட நிலையில் “ இது தான் அது” என்று சொல்லும் மோசமான  நிலைக்கு அவை இரண்டும் தள்ளப்பட்டு விட்டன. “ சுமை தாங்கி சாய்ந்தால் சுமை யென்ன வாகும்” என்பது யாருக்குத்தான் விளங்கப்போகின்றது.

முன்னைய காலங்களில் வாகன வசதிகள் குறைவாக இருந்தது. இதனால் மக்கள் எங்கும் எதனைப் பெறுவதாக இருந்தாலும் நடைப்பயணம் மூலமாகவே அவற்றினைப் பெற்றுக்கொண்டார்கள். பருத்தித்துறையிலிருந்து செல்வோரும் ஏனைய இடங்களிலிருந்து வருவோரும் சுமை தாங்கிகளுடன் வருகின்ற போது இவ்விடத்திலிருந்து இளைப்பாறி, உட்கார்ந்து விட்டு அயல் ஊர்களுக்கும் அதிலும் குறிப்பாக தும்பளை, மாதனை, நெல்லண்டை, கற்கோவளம், வராத்துப்பளை, வல்லிபுரம் ஆகிய ஊர்களுக்கும் உறவினர்களின் வீடுகளுக்கும் செல்வார்கள். இன்னும் பலர் அதிக தூரத்திலிருந்து வருவோர் தங்குவதற்கு உறவினர்கள் இல்லாத நிலையில் தெருமூடி மடத் திலே தங்கி விட்டே செல்வார்கள். இன்னும் கூடப்பார்த்தால் 60 70 வயது நிரம்பிய பெரியோர்கள் இளைப்பாறுவதற்கும் கூடிக்கதைப்பதற்கும் ஒரு நாளைக்கு ஒரு தடவை யென்றாலும் சிறிது நேரம் இதில் இருக்காமல் செல்லமாட்டார்கள். இத னால் தான் இன்னும் இவ்மடம் பல்வேறு வீதி அபிவிருத்திகள் என்று வந்து இதை உடைக்க முற்பட்ட போதும் அக்காரியம் தோல்வியில் அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு நோயினால் துன்பப்படுகின்ற பலருக்கும் இவ்விடம் அடைக்கலம் கொடுப்பதோடு, பொழுது போக்குகின்ற இடமாகவும் இது இருக்கின்றது .

யாழ்ப்பாணப் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத்தித்துறைக்கென்றும் தனித்துவமான பண்பாட்டுக் குறிகாட்டிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் தெருமூடி மடமாகும். யாழ்ப்பாணத்தில் பண்டார மடம், உப்பு மடம், முத்தட்டு மடம், மருத னார் மடம், ஆறுகால் மடம், கந்தர் மடம், நாவலர் மடம், செட்டியர் மடம், சுப்பர் மடம், ஒட்டு மடம், பண்டத்தரிப்பு மடம், சாரையடி மடம், சங்கத்தானை மடம், பனைமுனை மடம், நெல்லியடி மடம், திருநெல்வேலி மடம், மடத்துவாசல் ஆகிய இடங் களில் இத்தகைய தங்குமிடங்கள் இருந்ததற்கான சான்றுகள் இருந் தாலும் ஆனால் பருத்தித்துறை தெரு மூடி மடம் போல தெருவை மூடி இருமருக்கிலும் இருந்துள்ளன என்பது வெளிப்படையான உண்மையே.

மனித நேயத்தைக் கருத்திற் கொண்டு மக்களின் நீர் தாகம், தண்ணீர் தேவை களை நிறைவு செய்யும் முயற்சியில் பாதையின் இடையிடையே கிணறுகள் தோண்டி அக்கிணறுகளுக்கு அருகி லே தண்ணீர் தொட்டிகளை அமைத்து கிணற்றிலிருந்து பெறப்படும் நீரை மனிதனுக்கு மட்டுமன்றி ஆடு மாடு போன்ற கால் நடைகளும் விலங ;குகளும் தாகம் தீர்க்கத் தொட்டிகளை காட்டினர். இவற்றினை கட்டிய பிற்பாடு ஏதோ ஒரு குறைபாட்டை கண்டு உணர்ந்தனர். அதன் பயனாக ஆவு ரோச்சிக்கல்லை தண்ணிர் தொட்டிக்கு அருகில் அமைந்தனர். ஆடு,மாடுகள் நீர் அருந்திய பின் உடம்பில் ஏற்பட் டிருக்கும் நனமச்சலைப் அக்கல்லிலே உரோஞ்சி போக்கிடும் இந்தக் கல்லு மூன்று அடி தொடக்கம் நான்கு அடி உயரமும் ஒன்றரையடி அகலமாகவும் இருந்தது.

வாகனங்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தவதற்கு முன்னர் மாட்டு வண்டியே மக்களுக்கு பெரிதும் உதவி வந்தன. மாட்டு வண்டிகளின்  எண்ணிக்கையும் குறைந்திருந்தன. இதனால் மாட்டு வண்டில்களின் பொதிகளை ஏற்றிச் செல்ல முடியாதவர்கள் கால் நடையாகவே நீண்ட தூரங்களுக்கு பொதிகளைச் சுமந்து செல்லும் போது இடை இடையே இறக்கி இளைப்பாறுவதற்கு மக்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள். இதனை அவதானித்த நல்மனம் படைத்த மக்கள் ஏற்றதான பாதை ஒரங்களில் ஐந்து அடி அகலமும் 4 தொடக்கம் ஐந்து அடி உயரமான ஒரு மேடை போன்ற சுமை தாங்கியை அமைந ;தார்கள். இதனால் தத்தமது பொதி களை தாங்களாகவே இறக்கிக் கொள்ள சுமைதாங்கிக் கல் கை கொடுத்தது. இவற்றினை அமைத்து விட்ட ஒரு திருப்தியில் மக்கள் வாழ்ந்தனர்.

நூறு வருடங்களுக்கு முன்நோக்கி பார்த்தால் பருத்தித்துறையில் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் ஒர் துறை முகமாகவும் விளங்கியிருந்தது. இதனால் பல்வேறுபட்ட மக்களும் இங்கு வந்து குவியும் ஒர் இடமாக இது திகழ்ந்தது. வடை,அப்பம், தோசை ஆகிய தீன்பண்டங்களை வாங்கு வதற்கு இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் வருகை தந்தனர். இன்று போல் மருதங்கேணி பிரதேச செயலகம், கரவெட்டிப் பிரதேச செயலகம் என முன்னர் பிரிக்கப்பட்டு இருக்க வில்லை. இதனால் இப்பிரதேச மக்கள் தமது தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள பருத்தித்துறை மத்திய பகுதிக்கு வருகை தந்தனர். இம் மக்கள் இளைப்பாறுவதற்கென்று ஒர் தனியான இடம் இருக்கவில்லை.

இந்நிலையையும் கால் நடைப்பயணங்கள், வண்டிப்பாரங்கள், இராப்பயணங்கள், சிற்றூண்டி விடுதி, திருடர் தொல்லை, குறித்த நேர பிரயாணத்தடங்கல், பேய் பிசாசு மூடக் கொள்கைகள், திருத்தல யாத்திரைகள் என்பனவற்றின் தேவையை உணர்த்த மக்கள் பருத்தித்துறை தெரு மூடி மடத்தை உருப்பெறச் செய்தார்கள்.

இந்தத் தெரு மூடி மடம் 150 வருடங்கள் பழைமை வாய்ந்தவையாகும். இதன் கட்டடக்கலை திராவ டக்கலைப்பாணியில் அமைந்த்துள்ளது. வெண் வைரச் சுண்ண க்கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்கள் அதன் கபோதங்கள் மற்றும் தளம் ஆகிய சிறந்த கொத்து வேலைப்பாடுகளை கொண்டிருகின்றன. இங்கு 16 தூண்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஆறு தூண்களில் தமிழ் வரிவடிவில் சாசனங்கள் பொறிக்க பட்டிருக்கின்றன.

இத்தெரு மூடி மடத்தினது மேற் கூரையானது தூண்களின் கபோ தத்திலிருந்து இருபக்கங்களிலும் சமாந்தரமாக மேலெழுப்பட்டுள்ள ஒர் அரைச்சுவரின் மீது அமைக்கப்பட்ட விட்டத்துடன் கூடிய ஒரு சட்டகக் கோப்பினால் தாங்கப்பட்டுள்ளது. இத்தெரு மூடி மடத்தினூடான போக் குவரத்து நடைமுறைகளுக்கு கூரை எந்த வித தடையாக அமையவில்லை. 150 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டாலும் எதிர்கால நிகழ்வு களின் சிந்தனையிலிருந்தும் எமது முன்னோர்கள் தவறவில்லை என்பதை உண்மையாகவே உணர முடிகின்றது.

பல்வேறு பட்டோருக்கு பல பாதுகாப்புக்களையும் மன ஆறு தலையும் வழங்கிய தெரு மூடி மடம் காலப்போக்கில் என்ன கதியாகும் என்பது கேள்விக்குறியே? இத்தெருமூடி மடத்தோடு இணைந்திருந்த சுமைத்தாங்கிக்கல், ஆவுரோஞ்சிக்கல், துலாக்கிணறு மற்றும் நீர் தொட்டி ஆகியன முற்றாகச் செயலிழந்து இருந்த இடம் விட்டு நகர்த்து விட்டன. தெரு மூடி மடம் என்ற பெருமையுடன் இதுவொன்றுதான் மிஞ்சியிருக்கின்றது. இதன் பழைமை உணராத பலர் இத னைப் பகடையாய் பயன்படுத்த முயலலாம். இந்தப் பாரப்பரிய தெருமூடி மடத்திற்கு ஒரு காவலாளியை நியமித்தால் இந்தப் பழைமையை இன்னும் எத்தனையோ சந்ததியினருக்கு கையளிக்க முடியும் என்பது புத்தி ஜீவிகளின் எதிர்பார்ப்பாகும்.

கணவன் மனைவி சாம்பத்திய உறவு முற்றுப்பெற்று தந்தை, மகள், அண்ணன் தங்கை என்ற புனிதமான உறவிலிருந்து கொண்டு இவர்களுக்குள்ளே பலாக்காரம் தொடா ;கதையாய் போய் ஊடகங்கள் இவற்றால் செய்திகளுக்கு பஞ்சமில்லாது ஊதிப்பெருத்துக்கொண்டிருக்கும் இந ;தச் சமூகம் நடுவே பழைமை யெல்லாம் பறிமுதல் செய்யப்படும் நிலையில் பண்பாடுகள் ஊசலாடும் தருணம் கண்டு விழிப்புடன் செயற்பட வேண்டும்.

இந்தத் தெருமூடி யாவரிற்கும்  புனிதமானது. இதனைச் துஸ்பிரயோகம் செய்யவோ அல்லது சேதப்படுத்தவோ யாருமே முனையாத வகையில் பாது காப்பது எம் சந்ததிக்கான தேடலைச் செய்வதற்குச் சமன். விஞ்ஞானம் வளர்ந்து விட்டது என்பதற்காக பழைமையை விட்டுவிட்டு போக முடியாது. தெருவை மூடித்தெருவோரமாக கிடந்தாலும் எத்தனை ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு அடைக்கலப் பொக்கிஷமாக விளங்கும் இந்த தெரு மூடி மடம் 150 வருடங்களாக எம் முன்னையோர்களால் பாதுகாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.



Sunday, November 25, 2012




சுற்றுலாத்தலமாக மாற்றம் பெற்றுள்ள ஊர்காவற்துறைக்கோட்டை



மரபுரிமைச் சொத்துக்கள் என்பது ஒரு நாட்டின் தொன்மை விழுமியம் என்பவற்றை வெளிப்படுத்தி நிற்க்கும் ஒன்றாகும். இந்தவகையில் பல்வேறு வரலாற்றினை உள்ளடக்கிய பல பழைமையான பொக்கிஷங்கள் எம் யாழ் மண்ணில் இன்றும் உள்ளன. அந்த வகையில் ஊர்காவற்துறை கடற் கோட்டையானது ஊர்காவற்துறையையும் காரைநகரினையும் பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியில் போர்த்துக்கீசரினால் கட்டப்பட்டுள்ளது. இக் கோட்டையானது இன்று  வரலாற்றில் முக்கியமான ஒரு இடம் பெறுகிறது.

இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட இக்கோட்டையானது  ஹம்மன்ஹீல் என்றும் பூதத்ததம்பி கோட்டை என்றும்  அழைக்க ப்படுகிறது. பாக்கு நீரினையூடாக சென்ற பன்னாட்டு கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாண பரவைக் கடலில் நுழையும் வழியை அரண் செய்தது இக் கோட்டை. வடக்கில் கோடிக்கரைக்கோ நாக பட்டணத் துக்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக் கோட்டை பின்பற்றி தென்கிழக்காசியாவுக்கும் சீனாவுக்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்கு கரையோரமாக எந்த துறை முகத்திற்கும் போக முடியும் மேற்கு திசையில் தொண்டிஇ அதிராம் பட்டிணத்திற்கும் தென் கிழக்கிற்கு யாழ்ப்பாணத்திற்கும் போகலாம்.


ஓல்லாந்தரால் சிறந்த முறையில் பேணிப் பாதுகாக்கப்பட்ட இக்கோட்டையானது  1795 இல் பிரிட்டிஸ் காரரினால் கைப்பற்ற ப்பட்டதன்  பிற்பாடு சிறைக் கூடமாகவும்இ மருத்துவ நிலையமாகவும் பாவிக்கப்பட்டு வந்தது. கடலில் கப்பல் மூலம் போவோர் வருவோருக்கு நுழைவுச்சீட்டு இக்கோட்டையில் வைத்து வழங்கப்பட்டது. நாட்டிற்கு கப்பல் மூலம் வரும் பகையை இக்கோட்டை காத்து நின்றது. இங்கு வைத்து கப்பல்கள் ஆராய்ந்து சோதனை செய்யப்பட்டது. இதே வேளை இந்தியாவில் இருந்து குடியேறுபவர்களை பொது சுகாதாரத்திற்கு என்று தனிமைப்படுத்தும் நிலையமாகவும் இக் கோட்டை விளங்கியது.  சில காலம் இது தொல்லியல் திணைக்களப்பொறுப்பில் இருந்தது. இங்கு பிரிட்டிஸ் காலத்தில் சிறைக்கூடமாக பயன்படுத்தப்பட்ட இக்கோட்டையில் ஆயுள் தண்டைனை கைதிகளே சிறைப்படுத்தப்படுத்தப்படுத்தப்பட்டார்கள். ஆங்கிலேயர் காலத்தில் ஊர்காவற்றுறை முக்கிய கடற்படைத்தளமாக விளங்காத போதும் பிரதான சுங்கப் பரிசோதனை நிலையமாகவும் இது  விளங்கியுள்ளது.

 அழகிய பன்றிக்கால் வடிவில் அமைந்துள்ள இக்கோட்டையானது ஒல்லாந்தர் காலத்தில் நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டதாகவும்  முதன்முதலில் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்  இயற்கை அழகுடன் கடலின் மத்தியில் கம்பீரமான தோற்றத்தோடு உள்ள இக் கோட்டை  உல்லாச பயணிகளை பார்த்தவுடன் கவரும் ஒரு இடமாக உள்ளது.
 பிரிட்டிஸ் காலத்தில் இருந்து சிறைக்கூடமாக பயன்படுத்தப்பட்ட இக் கோட்டை இன்று சுற்றுலாத் தலமாகவும் வரலாற்று பொக்கிசமாகவும்  மாற்றம் பெற்றுள்ள  போதிலும்; இக் கோட்டையை இன்று  உள்ளே சென்று பார்ப்பது என்பது மிகவும் கஸ்ரமான விடயம். ஏனெனில்  இவ் இடமானது இன்று இலங்கை இராணுவத்தின் கடற்படைத்தளமாக உள்ள அதே நேரம் கடற்படையினர் இந்தியாவை கண்காணிக்கும் முக்கிய கடற்படை மையமாக இதனை அமைத்துள்ளதால்  இங்கு செல்வதற்க்கு பல பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன. இதனால் இவ் இடம் அழகான முறையில் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டும் எவருமே அறியாது உள்ளது என்பது துரதிஷ்டமான விடயமே .....





















Monday, November 19, 2012


  மாறாத ஊடகங்களும் மாறிவரும் பெண்களும்


ஆணும் பெண்ணும் சரிநிகர் சமனென உலகில் பலர் கூறுகின்றார்கள். பெண்ணியம் சம்பந்தமாக எத்தனையோ ஆக்கங்கள் வெளிவருகின்றன. பெண்ணியத்திற்காக எத்தனையோ  பேர் குரல் கொடுக்கின்றார்கள். பெண்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

எமது யாழ்ப்பாண சமூகத்தில் பெண்ணியம் சற்று மாறுபட்டது. இங்கு அரச அதிபரில் இருந்து பல உயர் பதவிகளிலும் பெண்களே இருக்கின்றார்கள். இத்துடன் பல்கலைக்கழகங்களிலும் உயர் பதவிகளிலும் ஆண்களைவிட பெண்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். இங்கு எல்லாவற்றிலும் விட புத்துணர்ச்;சி அளிக்க கூடிய செய்தி என்ன தெரியுமா? முன்பு யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர்களை காண்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால் இன்று ஊடகத்துறையில் பணிபுரிவதும் ஊடகத்துறையை கற்பதிலும் அதிகமாக பெண்களே கால்பதித்துள்ளனர்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் பெண்கள் உயர்வடைந்தாலும் குடும்பத்திலும் சமூக மட்டத்திலும் பல சவால்களையும் பிரச்சனைகளையும் பெண்கள் எதிர்கொள்வதை யாராலும் மறுக்க முடியாது. இன்றும் பல வீடுகளில் பெரியவர்கள் ஏன் படித்தவர்கள் கூட “பொம்பிளையளுக்கு உந்த வேலை சரிவராது. உந்த வேலை சரிவராது உந்த படிப்பு சரிவராது’’ இப்போதும் சொல்வதைக் கேட்க முடியும்.

மேலும் சமூக மாற்றங்களுக்கு முக்கிய ஆயுதமாக காணப்படுவது ஊடகங்களே ஆகும். இவ் ஊடகங்களே இன்று பெண்கள் சார்ந்த விடயங்கள் எதற்கும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. குறிப்பாக 2007ம் ஆண்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனமும் சர்வதேச பத்திரி கையாளர் சம்மேளனமும் கூட்டாக இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தினர். இதில் 2007ம் ஆண்டு பிரசுகிக்கப்பட்ட விடயங்களில் பெண்கள் சார்ந்த விடயங்கள் ஒரு சதவீதத்திற்கு குறைவான விகிதத்திலேயே பிரசுரிக்கப்பட்டன.
இவற்றுக்கு எல்லாம் முக்கிய காரணமாக காணப்படுவது ஆண் பெண் என்றும் அவர்களுக்கு என்று சில இயல்புகளை சில இயல்புகளை பாகு பிரித்து காட்டியமையுமே ஆகும். அதாவது வலிமை வேகம் கொடூரம் போன்ற இடங்களில் ஆண்களையும் நளினம்இ மென்மை, இரக்கம் போன்ற இடங்களில் பெண்களையும் வைத்துக் கொண்டமையுமே ஆகும். இவற்றையே இன்று ஊடகங்களும் தொடர்கின்றன.

2007ம் ஆண்டு கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பொலிஸார் பலவந்தமாக வெளியேற்றி னர். இந் நேரத்தில் வெளியான செய்திகளில் எல்லாம் சுட்டிக் காட்டப் பட்ட படங்களில் மூட்டை முடிச்சுகளுடன் வீதிகளில்  பெண்கள் அழுதுகொண்டு இருப்பதே காட்டப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர் த்து பல கருத்துக்கள் வெளியாகின. இவை அனைத்தும் ஆண்களின் குரல்களே! பெண்களின் குரல்களோ ஒலிக்க வில்லை. இத்தகைய விடயங்களில் பெண்களின் குரல்கள் ஒலிக்காமை பாராபட்சமான செயல். அது மட்டுமன்றி ஊடகவி யலாளர்கள் பால்நிலை உணர்திறனற்று நடக்கின்ற அதே வேளை மக்கள் மன தில் உள்ள எண்ணங்களை நிலை நிறுத்தும் செயலையே செய்கின்றன. இலங்கை போன்ற உள்ளுர் கலவரம் நடக்கும் நாடுகளில் பெண்களின் குரல்கள் ஒலிப் பதில்லை. அழுகுரல்களும் சோகம் ததும்பிய படங்களுக்கும் மட்டுமே பெண்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

மேலும் சினிமாவில் ஆணுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆண் நடிகர்களுக்குத்தான் அதிக ளவு ஊதியம் வழங்கப்படு கின்றது. ஊடகங்களின் சினி மாப் பக்கங்களில் பெண்களின் கவர்ச்சிப் படங்கள் பத்திரிகை விற்பனையை உயர்த்தும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். பத்திரிகை களையும் சஞ்சிகை களையும் அதிகம் வாசிக்கும் பழக்கம் ஆண்களை விட பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் இதழியல் உலகம் அவர்களுக்கு உரிய இடத்தை கொடுப்பது இல்லை.

அத்துடன் கிண்டலுக்கும் கேலிக்கும் பெண்களை பயன்படுத்தும் மரபிலிருந்து ஊடகங்கள் இன்னும்  மீளவில்லை. அண்மையில் வெளியான நாளிதழ் ஒன்றின்   கேலிச் சித்திரத்தில் பெண் வேட்பாளர் ஒருவர் எனக்கு எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார். இதற்க்கு பதிலளித்த மற்றொரு ஆணெருவர் “ என்னால் முடியாதே நான் திருமணம் செய்து விட்டேனே…” என்கின்றார். இது பெண்ணை உடல் சார்ந்து பார்க்கும் மனப்பாங்கே ஊடகவியலாளரிடம் இருப்பதைக் காட்டுகின்றது.

பத்திரிகை சம்பேளனத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் ஜக்குலின் பார்க் குறிப்பிடு கையில் “பெண்கள் பற்றிய விடயங்களுக்கு பத்திரிகை கள் முக்கியத்துவம் அளிப் பதன் மூலம் அது சமூகத்து க்கும் நாட்டுக்கும் முக்கியத்துவமான ஒரு சேவையை செய்கின்றது. பெண்களின் நிலை உயர்ந்தால் குடும்பத்தின் நிலை உயரும். குடும்பத் தின் நிலை உயர்ந்தால் நாடு நலம்பெறும் என்று குறிப்பி டுகின்றார்.

மேலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எழுத்தறிவில் இலங்கை சிறந்து விளங்குகின்றது. இலங்கையில் 15வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 89.9 சதவீதம் எழுத்தறிவு உள்ளது. தமிழ்நாட்டில் 64.4 வீதம் ஆகும். பெண்களின் எழுத்தறிவில் இலங்கையில் கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையே அதிகம் வேறுபாடு இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் நகரம் 76 சதவீதமாகவும் கிராமம் 54 சதவீதமாகவும் உள்ளது. எனவே எதனையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் மனோபலமும் சவால்களை வென்றெடுக்கும் ஆற்றலும் பெண்களுக்கு வேண்டும். இதற்கு பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது கட்டாயம் ஆகும்.

Monday, October 15, 2012

மண்டைதீவு மக்களுக்கு உதவிக்கரம்  நீட்டுவார் யாரோ ?

 

மண்டைதீவு பிரதேசத்தின் நிலை பற்றிய ஒரு நேரடிப்பார்வை....

யுத்தம் தந்த வேதனைகள் நெஞ்சின் ஓரமாக இருந்தாலும் சொந்த இடம் செல்வதே இனி கிடைக்கப் போகும் ஒரே நிம்மதி என்ற ஏக்கத்துடன் இன்றும் இம் மண்ணில்  வாழ்வோர் பலர். கடந்து வந்த  பாதைகள் துயரம் நிறைந்ததாக காணப்பட்டாலும் தொடரும் வாழ்க்கையும் ஏக்கத்துடனேயே இவர்களை நிற்க்க வைத்துள்ளது.இன்று மீளக்குடியமர்வு என்னும் பெயரில் தமது சொந்த இடங்களுக்கு சென்று வாழ்வோரில் பலர் இன்றும் பலரிடம் உதவிக் கரம் நீட்டி நிற்க்கும் துயரத்தையே காணமுடிகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து      5 கிலோ மீற்றர் தூரத்தில் இருககிறது  மண்டை தீவு பிரதேசம்.கடலினால் சூழப்பட்ட இப் பகுதிக்கு நகரில்  இருந்து செல்லும் போது காப்பெற் வீதியில் வேகமாக செல்லும் வாகனங்கள் இப் பகுதியை அண்மித்ததும் மெது மெதுவாக நகரத் தொடங்கி விடுகின்றன. பல வருடங்களாக மழையையே கண்டிராதது போல் வரண்ட  நிலையில் காட்சியளிக்கும் இவ் ஊரின் வாயிலிலேயே எம்மை வரவேற்று நிற்கின்றன இறந்து கிடக்கும் கால்நடைகள். ஊரிற்க்குள் நுழைந்தவுடன் அடுக்கடுக்காய் தெரியும் கட்டடங்கள் நெருங்கிய போது தான் புரிகின்றது அவை வெறுமையான நிலையில் உள்ள உடைந்த சுவர்கள் என்று.

இப் பகுதியின் இன்றைய நிலைக்கு மரியாம் பிள்ளை எலிசபெத்  (வயது 85) என்ற அம்மாவின் கதையே எடுத்துக்காட்டாகும். கடந்த 22 வருடங்களின் வருடங்களின் பின்னர் மீளவும் எமது சொந்த வீட்டில் காலடி எடுத்து வைத்து விட்டோமே ஒன்ற சந்தோசம் இவருக்கு ஒரு புறம் இருந்தாலும் தமது வறண்ட இப் பூமியில் தனது வருங்கால வாழ்வும் வறண்டு போய் விடுமோ என்ற ஏக்கம் அதிகமாக  இழையோடியுள்ளது.
1988 ம் ஆண்டுகளில் பதின் மூன்று பிள்ளைச் செல்வங்களுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்த இவர்களது குடும்பம் யுத்தம் என்னும் புயலில் அகப்பட்டு இன்று சின்னா பிண்ணமாகியதால் இவர் ஒரு தனிமரமாகி தவிர்த்துக் கொண்டிருக்கின்றார். 90 களில் இப் பகுதியை விட்டு இடம் பெயர்ந்து வன்னிக்கு சென்ற இவர் இன்று யுத்ததில் தனது கணவனையும் நான்கு பிள்ளைகளையும் பறிகொடுததுவிட்டார். இவருக்கு இன்று துணையாக இருப்பது இரு சிறிய பெடடிக்கடையே.கடற்படையினரின் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மண்டை தீவு பிரதேசத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும கடந்த 2004ம் ஆண்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டார்கள். இதன்  போது இவரும் 5ம் வட்டாரப்பகுதியில் உறவினர் வீட்டில் வந்து குடியேறினார்.  மீண்டும் தொடர்ச்சியான யுத்தம் இவர்களை இடப்பெயரச் செய்தது. கடந்த தை மாதம் மக்கள் மீளவும் இப்பகுதி முழுவதும் குடியமர்த்தப்ப்டுள்ளார்கள்.

இன்று இவரது பிள்ளைகள் ஒவ்வொருவரும் குடும்பமாகி திசைமாறி சென்றதன் பின்னர் தனது வயிற்று பிழைப்புக்காக தான் வைத்திருந்த 5 பவுண் நகையை வெறும் 60 ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளார். இவரது அறியாமையை சாதகமாக்கி அவரை யாரோ ஏமாற்றிச் சென்றுவிட்டதை உணர முடிந்தது. இப்பபோது கிடைத்த பணத்தைக்கொண்டு ஒரு சிறிய பெட்டிக்கடை போட்டு தன் வாழ் நாளை ஓட்டி வருகின்றார்.
 “மாளிகையாக இருந்த என்ர வீடு இன்று தர மட்டம் ஆன பிறகும் இது வரை ஒரு தற்காலிக வீடோ அல்லது வீட்டுத்திட்டத்திற்கான ஒரு பதிவுகளோ இன்று வரை பதியப்படவில்லை. பிச்சை சம்பளமாக 2 தரம் நூறு ரூபா தந்தாங்கள் பிறகு அதுவும் நிப்பாட்டிப் போட்டாங்கள். வாக்காளர் சீட்டில இருந்த என்ர பெயர் இப்ப திடீரென்று காணாமல் போட்டுது. நிவாரண முத்திரை குறிப்பிட்ட சிலருக்கு கொடுக்கிறாங்க நாங்கள் போய் கேட்டால் வரும் வரும் என்டுறாங்களே ஒழிய இது வரை வந்த பாடில்ல. குடிக்கிறதுக்கு கூட தண்ணி காசு கொடுத்தாலும் கிடய்க்கிற பாடில்ல .இதனால எனர் பிள்ளை ஆசையாய் வளர்த்த மாடுகள் எல்லாம் என்ர கண் முன்னாடியே செத்துப்போச்சு. வருத்தம் எதும் வந்தால் அவசரத்துக்கு போறதுக்கு ஒரு ஆஸ்பத்திரி கூட இப்ப இல்லை. ஆனால் 90களில் தீவுப்பகுதிகளில் மிகப் பெரிய வைத்திசாலை இங்க தான் இருந்திச்சு. .ஆனால் இன்று அதை ஆமிக்காரன்  தன்ர முகாம் ஆக்கி போட்டான். என்று தமது ஊரின்  நிகழ்கால வாழ்க்கை நிலையை வார்த்தையளால் கொட்டித் தீர்த்
தார்.


இன்று இவரது பிள்ளைகள் ஒவ்வொருவரும் குடும்பமாகி திசைமாறி சென்றதன் பின்னர் தனது வயிற்று பிழைப்புக்காக தான் வைத்திருந்த 5 பவுண் நகையை வெறும் 60 ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளார். இவரது அறியாமையை சாதக மாக்கி அவரை யாரோ ஏமாற்றிச் சென்றுவிட்டதை உணர முடிந்தது. இப்பபோது கிடைத்த பணத்தைக்கொண்டு ஒரு சிறிய பெட்டிக்கடை போட்டு தன் வாழ் நாளை ஓட்டி வருகின்றார்.
 “மாளிகையாக இருந்த என்ர வீடு இன்று தர மட்டம் ஆன பிறகும் இது வரை ஒரு தற்காலிக வீடோ அல்லது வீட்டுத்திட்டத்திற்கான ஒரு பதிவுகளோ இன்று வரை பதியப்படவில்லை. பிச்சை சம்பளமாக 2 தரம் நூறு ரூபா தந்தாங்கள் பிறகு அதுவும் நிப்பாட்டிப் போட்டாங்கள். வாக்காளர் சீட்டில இருந்த என்ர பெயர் இப்ப திடீரென்று காணாமல் போட்டுது. நிவாரண முத்திரை குறிப்பிட்ட சிலருக்கு கொடுக்கிறாங்க நாங்கள் போய் கேட்டால் வரும் வரும் என்டுறாங்களே ஒழிய இது வரை வந்த பாடில்ல. குடிக்கிறதுக்கு கூட தண்ணி காசு கொடுத்தாலும் கிடய்க்கிற பாடில்ல .இதனால எனர் பிள்ளை ஆசையாய் வளர்த்த மாடுகள் எல்லாம் என்ர கண் முன்னாடியே செத்துப்போச்சு. வருத்தம் எதும் வந்தால் அவசரத்துக்கு போறதுக்கு ஒரு ஆஸ்பத்திரி கூட இப்ப இல்லை. ஆனால் 90களில் தீவுப்பகுதிகளில் மிகப் பெரிய வைத்திசாலை இங்க தான் இருந்திச்சு. .ஆனால் இன்று அதை ஆமிக்காரன்  தன்ர முகாம் ஆக்கி போட்டான். என்று தமது ஊரின்  நிகழ்கால வாழ்க்கை நிலையை வார்த்தையளால் கொட்டித் தீர்த்தார்.                                                           

இப் பகுதி மக்கள் இன்று எதிர்கொள்ளும் இப் பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இப் பகுதி பிரதேச செயலாளர் ஆர். ரமேஸ் அவர்களிடம் கேட்ட போது, இப் பகுதியில் இன்று 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சேவாலங்கா நிறுவனத்தின் உதவியுடன் தற்காலிக வீட்டுத்திட்டம்  குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக j/07  பிரிவில் 9பேருக்கும்  j/09 பிரிவில் 18பேருக்குமே தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு ள்ளன.ஏனையோரின் நிலை பற்றி பிரதேச சபையிடம் அறிவிக்க ப்பட்டுள்ளது .மேலும் முதியோர் கொடுப்பனவில் இன்றும் குழப்ப நிலை தொடர்கிறது. விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இங்கு 110க்கு மேற்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் உள்ள போதும் இது வரை அவர்களுக்குரிய உதவிகள் எவையும் வழங்கப்படவில்லை” எனவும் குறிப்பிட்டார்.நன்னீர் வளம் அற்ற பகுதியில் வாழும் இம் மக்கள்  20 லீற்றர் தண்ணீரை 15ரூபாவுக்கு வாங்கி குடிக்க வேண்டிய இக்கட்டான நிலையிலேயே வாழ்கின்றார்கள்.  அதுவும் கூட இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கின்றது. மின்சார வசதியற்று இருக்கும் இப் பகுதியில் உள்ள ஒரு சிலரது முயற்சியால் பட்டறை எஞ்சின் மூலமாக மின்சாரம் கொடுக்கப்படுகின்றது . 60w மின்குமிழ் ஒன்றுக்கு மாதம் 500 ரூபா செலுத்த வேண்டும்.


இது பற்றி இக்கிராம வாசியான ஜெயசீலன் சூசைப்பிள்ளை குறிப்பிடும் போது, "நாங்கள் மூன்று மின்குமிழ் பாவிக்க மாதம் 1000 ரூபா கொடுக்கிறம்.  புpள்ளையள் எப்படியாச்சு படிக்க வேணும் என்டதால் இதை கஸ்ரப்பட்டு கொடுத்தன். இப்ப என்ர பிள்ளைக்கு கம்பஸ் கிடைச்சதால பட்ட கஸ்ரத்துக்கு எல்லாம்  பலன் கிடைச்சிருக்கு என்ற ஒரு சந்தோசமே போதும் “என பெரு மூச்சு விட்டார்.இன்று வறண்ட பூமியாக காட்சியளிக்கும் இப் பகுதியில் தேர்தல் காலங்களில் மட்டுமே ஆதரவு கேட்டு செல்வோர் இன்று வரை இவர்களது வாழ்க்கைக்கு ஆதரவுக் கரம் கொடுக்காது இருப்பது துயரமான ஒரு விடயமே.....தற்காலிக வீடுகள் எவையும் கட்டிக் கொடுக்கப்படாது சிறிய கொட்டிலில் குடியேறி இருக்கும் இவரிடம் தற்காலிக வீடு அமைத்து தராது எப்படி குடியேறினீர்கள் எனக் கேட்டதற்க்கு “ நாங்கள் எங்கட சொந்த ஊரிலேயே 3ம் வட்டாரத்தில் இருந்து 5ம் வட்டாரத்துக்கு வரவே 8 வருடங்கள் காவல் இருந்தம். இனியும் வீடு இல்ல எண்டு போட்டு வேறயாக்களின்ர வீடுகளில் இருந்தால் 4 சுவரோடு கிடக்கிற சொந்த காணியையும் விட்டு நடுத்தெருவில தான் நிற்கனும். அதால தான் கடன் பட்டு இந்த கொட்டில போட்டு இங்க இருக்கிறன் “ என்று  தனது சோகத்தை   எம்மிடம் கொட்டினார்.



இன்று வறண்ட பூமியாக காட்சியளிக்கும் இப் பகுதியில் தேர்தல் காலங்களில் மட்டுமே ஆதரவு கேட்டு செல்வோர் இன்று வரை இவர்களது வாழ்க்கைக்கு ஆதரவுக் கரம் கொடுக்காது இருப்பது துயரமான ஒரு விடயமே..