NeoCounter

NeoCounter

Friday, December 30, 2011

பூரணமடையாத வீட்டுத்திட்டங்கள்

மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற அரியாலை கிழக்கு பிரதேச மக்கள் 16 வருடங்களின் பின் மீளக்குடியேறி உள்ளனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நாவலடி, பூம்புகார் ஆகிய இடங்களை உள்ளடக்கிய இம்மக்கள் தற்காலிக வீடுகளை அமைத்து மீள் குடியேறி யுள்ளார்கள். இவர்களுக்கென இந்தி ய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத் தின் படி 50 வீடுகள் கட்டித் தருவ தாக கூறப்பட்டு கிந்துஸ்தான் பிறைவற் லிமிட்டட் நிறுவனமான து இதனை செயற்படுத்தி வருகின் றது.
                                        இவ்வீட்டுத்திட்டமானது சொந்த காணி உரிமை உடையோர் அதிக அங்கத்தவர்களை கொண்ட குடு
ம்பம், இறுதி யுத்தின் போது பாதிக்கப்பட'டோர் என்ற அடிப்படையிலேயே குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டது. மூன்று மாத கால வரையறைக்குள் முடிவடையும் எனக் கூறப்பட்டிருந்தாலும் இது வரையிலும் எந்த வீடுக ளும் பூரணமடையாத நிலையில் உள்ளது. இது பற்றி கிந்தஸ்தான் நிறு வனப் பணியாள் மழைகாலம் என்பதனால் வீடுகட்டுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறினார்.
                                                 இதில்
மக்களிடம் பணம் எதனையும் கையளிக்காது இந்நிறுவனத்தின் மூலமாகவே வீட்டுத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் படி முதலாம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களது வீடுகளே இன்னும் பூர்த்தியடை யாத நிலையில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு என பதிவுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.  எனினும் உரிய முறையில் படிவங்கள் எதுவுமற்ற விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றது என யோன்சன் என்பவர் குறிப்பிட்டார்.
                                                      
                   தற்காலிக வீடமைப்புக்காக 40 குடும்பங்களுக்கு 12 தகரங்கள் வீதம் வழங்கப்பட்டது. அத்துடன் இராணுவத்தினரால் 10 குடுபங்க ளுக்கு தற்காலிக வீடுகள் கையளி க்கப்பட்டது. இவை தவிர ஏனைய மக்கள் தமது சொந்த செலவிலே யே குடிசைகள் அமைத்துக் குடியேறி உள்ளார்கள். தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலை யில் இக் குடிசைகளில் வசித்து வருகின்ற மக்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். மழை நீர் வீடுகளுக்குள் புகுதலினால் உறங்குவத ற்கும் சமைப்பதற்கும் இடங்களின்றி உள்ளனர். மீள்குடியேறி 15 மாதங்கள் கடந்த நிலையில் இராணுவத்தினரால் வழக்கப்பட்ட வீடுகளின் சுவர்கள் மழை காரணமாக இடிந்து விழும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளது என நாகேஸ்வரன் சுபா என்பவர் குறிப்பிட்டார்.
                                                  
                              வயற்கரை ஓரமாக எங்களது குடியிருப்புகள் அமைந்து ள்ளதால்      தற்Nபாது வெள்ளத்துக்கு மத்தியி லேயே வசித்து வருகின் றோம். இதனால் இரவு நேரங்களில் அடிக் கடி பாம்பு, பூச்சிகள் வருவத னால்  குழந்தைகளை வைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்கவே முடியவில்லை.  இது மட்டு மல்லாது இங்க நுளம்புகளும் அதிகம். இதனால் பிள்ளைகளுக்கு அடிக்கடி வருத்தங்கள் வந்தபடியுள்ளது என்று ராகினி குறிப்பிட்டார்.
                                                        புதிதாக மீளக்குடியேறியுள்ள இம் மக்கள் தாம் எதிர் கொண்டு வரும் இப்பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும்  நாள் எப்போது?   என்ற எதிர்பாப்புடனேயே இன்றுவரை வாழ்ந்து வருகின்றமை சோகமான ஒரு விடயமாக உள்ளது.   




                             

0 comments:

Post a Comment